
புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், நாடாளுமன்றம் அருகேயுள்ள மசூதியில் நேற்று கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் அகிலேஷ் யாதவ் மனைவி டிம்பிள் யாதவ் உட்பட சமாஜ்வாதி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். டிம்பிள் யாதவ் முக்காடு போடாமல் சாதாரணமாக சேலை கட்டி அமர்ந்திருந்தார்.
இதுகுறித்து பாஜக சிறுபான்மையின மோர்ச்சா அமைப்பின் தலைவர் ஜமால் சித்திக் கூறியதாவது: வழிபாட்டுத் தலமான மசூதிக்குள் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் பங்கேற்ற டிம்பிள் யாதவ் முறையாக ஆடை அணியாமல் மசூதி விதிமுறைகளை மீறி விட்டார்.