
மதுரை: விசாரணையின்போது தூத்துக்குடி உப்பளத் தொழிலாளி உயிரிழந்த வழக்கில் டிஎஸ்பி மற்றும் 3 காவலர்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கவும், ஜாமீன் வழங்கவும் உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தூத்துக்குடி மாவட்டம் மேல அலங்காரத்தட்டு பகுதியைச் சேர்ந்தவர் வின்சென்ட். உப்பளத் தொழிலாளியான இவரை நாட்டு வெடிகுண்டு வழக்கு விசாரணைக்காக 1999 செப். 17-ம் தேதி தாளமுத்து நகர் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். காவல் நிலையத்தில் போலீஸார் வின்சென்ட்டை தாக்கியுள்ளனர். இதில் வின்சென்ட் உயிரிழந்தார்.