
திருச்சி: திமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர்கள்போல ஐஏஎஸ் அதிகாரிகள் செயல்படுவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை வகித்தார். கோட்டப் பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம், மாநகர் மாவட்டத் தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.