
சென்னை: அரசு பள்ளி கட்டிடங்கள் தரத்தை உறுதிசெய்ய வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 20-ம் தேதி இடிந்து விழுந்தது.
அரசின் பள்ளிக் கட்டிடங்களை யார் கட்டினாலும், யார் திறந்து வைத்தாலும் கட்டிடங்களின் தரமானது ஒதுக்கிய மதிப்பீட்டுக்கு ஏற்ப சற்றும் குறையாமல் இருக்கவேண்டும்.