
சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது உள்ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி திட்ட இயக்குநரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்பாட்டுக்கு பாடுபடும் தமிழ் அறிஞர்கள், படைப்பாளர்களுக்கு தமிழக அரசு பல்வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), வீர மாமுனிவர் விருது (ரூ.2 லட்சம் & ஒரு பவுன் தங்க பதக்கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), நற்றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்கம்), தூய தமிழ் பற்றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்கும், தூய தமிழ் பற்றாளர் பரிசுக்கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழ் அறிஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.