• July 24, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழக அரசின் தேவநேய பாவாணர் விருது, வீர​மா​முனிவர் விருது உள்​ளிட்ட விருதுகளுக்கு தமிழ் அறிஞர்​கள் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்​ணப்​பிக்​கலாம் என்று அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக செந்​தமிழ் சொற்​பிறப்​பியல் அகர​முதலி திட்ட இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு விவரம்: தமிழ் மொழியின் மேம்​பாட்​டுக்கு பாடு​படும் தமிழ் அறிஞர்​கள், படைப்​பாளர்​களுக்கு தமிழக அரசு பல்​வேறு விருதுகள், பரிசுகளை வழங்கி வரு​கிறது. அந்த வகை​யில் 2025-ம் ஆண்​டுக்​கான தேவநேய பாவாணர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), வீர மா​முனிவர் விருது (ரூ.2 லட்​சம் & ஒரு பவுன் தங்க பதக்​கம்), தூய தமிழ் ஊடக விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), நற்​றமிழ் பாவலர் விருது (ரூ.50 ஆயிரம் & ரூ.25 ஆயிரம் மதிப்பு தங்க பதக்​கம்), தூய தமிழ் பற்​றாளர் விருது (ரூ.20 ஆயிரம்) ஆகிய விருதுகளுக்​கும், தூய தமிழ் பற்​றாளர் பரிசுக்​கும் (ரூ.5 ஆயிரம் பரிசு) தமிழ் அறிஞர்​களிடம் இருந்து விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *