• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பெரம்பலூர் மாவட்டம் வேப்பன்தட்டை ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர் திருவிழாவின்போது, பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி வழியாக தேர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பன்தட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீ வேத மாரியம்மன் கோயில் தேர் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் செல்வதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருவதாகக் கூறி அக்கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார், மணிவண்ணன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *