• July 23, 2025
  • NewsEditor
  • 0

கோவை: பேரூர் பட்டீசுவரர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய அறநிலையத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையரிடம் இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.

கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில், கோயில் நடை அடைக்கப்பட்ட பிறகு, காவல் கண்காணிப்பாளருக்கு சிறப்பு அனுமதி வழங்கி தரிசனத்துக்கு அனுமதித்ததாகவும், இதனால் கோயிலின் ஆகம விதிகள் மீறப்பட்டதாகவும் பேரூர் பட்டீசுவரர் கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் மீது சர்ச்சைகள் எழுந்தன. இந்தச் செயலுக்கு சிவனடியாா்கள், பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *