
சென்னை: விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுப்பதால் மதுரை ஆதீனத்துக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்துள்ள மனுவுக்கு ஆதீனம் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்க காரில் வந்த மதுரை ஆதீனத்தின் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக மாநாட்டில் பேசிய ஆதீனம், தன்னை கொலை செய்ய சதி நடந்துள்ளதாகவும், பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.