
“தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்போது, அனைத்துக் கட்சியினரும் அமைச்சரவையில் இடம் பெறுவார்கள்” என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தெரிவித்தார்.
திருச்சியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வீழ்த்த, அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து 360 டிகிரியில் பலமுறை தெரிவித்துவிட்டேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம். அதிமுக கூட்டங்களில் பொதுச் செயலாளர் பழனிசாமி, கூட்டணியில் உள்ள கட்சி பெயர்கள் கூறும்போது, அமமுக பெயரை கூறாதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.