
புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் வாடகை வீட்டில் போலி தூதரகத்தை நடத்தி மோசடியில் ஈடுபட்ட ஹர்ஷ்வர்தன் ஜெயின் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெஸ்டார்டிகா, சபோர்கா, பவுல்வியா, லோடோனியா என இல்லாத நாடுகளின் தூதராக தன்னைக் காட்டிக்கொண்டு கடந்த 7 ஆண்டுகளாக இந்த போலி தூதரகத்தை காசியாபாத்தைச் சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஜெயின் நடத்தி வந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்களுடன் தான் இருப்பது போன்று போலி புகைப்படங்களை உருவாக்கி பலரையும் நம்ப வைத்துள்ளார்.