
புதுச்சேரி: பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோருக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்து ஜிப்மர் நிர்வாகம் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரம்பரிய ஆடை அணியாவிட்டால் அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெறுவோர் கருப்பு அங்கியை அணிவது வழக்கம். ஆனால் சமீபத்தில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம், பட்டமளிப்பு விழாக்களில் இந்திய பாரம்பரிய உடைகளை அணியுமாறு அறிவுறுத்தியது. மாணவர்கள் தங்கள் மாநிலத்தின் கலாச்சாரத்துக்கு ஏற்ப உடைகளை வடிவமைத்துக் கொள்ளலாம் என கூறப்பட்டது.