• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: தர்மஸ்தலா கோயிலில் பெண்கள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக வெளியாகும் தகவல்களில், கோயில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்கடேவின் சகோதரர் ஹர்ஷேந்திர குமாருக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதை தடைசெய்து பெங்களூரு சிவில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று ( ஜூலை 23) மறுத்துவிட்டது.

‘தேர்ட் ஐ’ என்ற யூடியூப் சேனலுக்காக ஆஜரான வழக்கறிஞர் வேலன், இந்த மனுவை முன்கூட்டியே பட்டியலிட வாய்மொழியாகக் கோரிக்கை வைத்தார். அப்போது இந்த விவகாரத்தில் முதலில் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுறுத்தினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *