• July 23, 2025
  • NewsEditor
  • 0

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலையில் இருந்து மக்களை கட்டாயமாக வெளியேற்றும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திருநெல்வேலியில் தாமிரபணியில் உயிர்நீத்த மாஞ்சோலை தொழிலாளர்களின் 26-வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற டாக்டர் கிருஷ்ணசாமி, தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியது: ”திருநெல்வேலியில் மண்ணுரிமை, மனித உரிமை வேண்டி போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின்போது தாமிரபரணியில் உயிர்நீத்தவர்களுக்கு நினைவு மண்டபம் அமைப்பதற்கு நதிக்கரையில் இடம் கோரியுள்ளோம். எங்களது சொந்த செலவில் நினைவு மண்டபம் கட்ட தயாராக இருக்கிறோம். ஆனால், அரசு தற்போது வரை இதற்கு செவி சாய்க்கவில்லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *