• July 23, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசியல் சாசன பிரிவு 324-ன்படி, குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவர் தேர்தலை நடத்தும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. எனவே, குடியரசு துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான செயல்முறை தொடங்கியுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *