
கோவை பேரூரில் பழமை வாய்ந்த பட்டீசுவரர் கோயில் உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோயிலின் நடை திறக்கப்பட்டு, மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும். பின்னர், மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 9 மணிக்கு அடைக்கப்படும். இரவு நடை அடைக்கப்பட்ட பிறகு மறுநாள் திறக்கப்படும்.
இந்நிலையில், கடந்த 19-ம் தேதி ஆகம நடைமுறைகளை மீறி, பேரூர் பட்டீசுவரர் கோயிலின் நடை இரவில் மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக கோயிலுக்கு வந்த சிவனடியார் ஒருவர் வீடியோ வெளியிட்டு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.