• July 23, 2025
  • NewsEditor
  • 0

தேன்கனிக்கோட்டை அருகே 9 கிமீ தூரம் தார் சாலை வசதியில்லாததால் மலைக் கிராம மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தேர்தல் வாக்குறுதியில் மட்டும் சாலை திட்டம் இடம்பெறுவதாக மலைவாழ் மக்கள் வேதனை தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே பெட்டமுகிலாளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களான மேலூரிலிருந்து தொழுவபெட்டா வழியாக டி.பழையூர், குல்லட்டி, கவுனூர், தொட்டதேவனஅள்ளி உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். இந்த மலைக் கிராமங்களில் சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக மேலூரிலிருந்து தொழுவபெட்டாவுக்கு 9 கி.மீ தூரம் வனப் பகுதிக்கு இடையே மண் சாலை மட்டுமே உள்ளது. இந்த மண் சாலையைத் தார் சாலையாக மாற்ற பல ஆண்டுகளாக இக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும், வனத்துறை அனுமதி கிடைக்காததால், சாலை வசதி இக்கிராம மக்களுக்குக் கனவாக இருந்து வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *