
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணிதம் மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என வர்த்தக சங்கம் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலாடி வர்த்தக சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் சென்னையிலுள்ள கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கடந்த 2012 ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.