
காஞ்சிபுரம்: பெண்களின் பாதுகாப்பில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவரை மூத்த அர்ச்சகர் நடராஜ சாஸ்திரி வரவேற்றார்.
அம்மனை தரிசித்துவிட்டு கோயிலுக்கு வெளிய வந்த அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மார்ச் மாதத்திலேயே உடல் நலம் குன்றி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அனைவருக்கும் தெரியும். அவர் நாட்டுக்கு சிறந்த சேவை செய்துள்ளார். மேற்கு வங்க ஆளுநராகவும் இருந்துள்ளார்.