
சென்னை: நல்ல, திறமையான நீதி நிர்வாகத்துக்காகவும் நீதிபதிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவது உண்டு என சென்னையிலிருந்து ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கு இடமாறுதலாகி செல்லும் நீதிபதி பட்டு தேவானந்த் தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியாற்றிய நீதிபதி பட்டு தேவானந்த் ஆந்திரா உயர் நீதிமன்றத்துக்கும், விவேக்குமார் சிங் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான வழியனுப்பு விழா நேற்று சென்னை உயர் நீதிமன்ற கலையரங்கில் தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா தலைமையில் நடைபெற்றது.