• July 23, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர்​களுக்​கான தேர்​தல் வாக்​குறு​தியை நிறைவேற்​றாத திமுக அரசை கண்​டித்​து, தமிழகம் முழுவதும் நேற்று தர்ணா நடை​பெற்​றது. திமுக தேர்​தல் வாக்​குறு​திப்​படி 2013-ம் ஆண்டு ஏப்​.1-ம் தேதிக்​குப் பிறகு பணி​யில் சேர்ந்தவர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யம் வழங்க வேண்​டும் என்பன உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, சிஐடி​யு-வின் போக்குவரத்து மற்​றும் ஓய்​வூ​தி​யர் நலப் பிரிவு சார்​பாக தமிழகம் முழு​வதும் தர்ணா போ​ராட்​டம் நடை​பெற்​றது.

இதன் பகு​தி​யாக சென்​னை, பல்​ல​வன் சாலை​யில் நடை​பெற்ற போ​ராட்​டத்​தில் சம்​மேளன பொதுச்​செய​லா​ளர் கே.ஆறுமுக நயினார், பொருளாளர் சசிகு​மார், அரசாங்க போக்​கு​வரத்து ஊழியர் சங்க பொதுச்​செய​லா​ளர் வி.த​யானந்​தம், தலை​வர் ஆர்.துரை, ஓய்வு பெற்றோர் நல அமைப்​பின் மாநிலத் தலை​வர் எம்​.சந்​திரன், பொருளாளர் ஆதி​மூலம் உள்​ளிட்ட முக்​கிய நிர்​வாகிகள் பங்​கேற்று பேசினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *