
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரியில் இருந்து பிஹார் மாநிலம் பாட்னாவுக்கு திங்கள்கிழமை இரவு புறப்பட்ட விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (ஆர்பிஎப்) சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு பெட்டியில் இளம் பெண்கள் அதிக அளவில் இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள், பெண்களுடன் பயணித்த ஒரு ஆண் மற்றும் பெண்ணிடம் அதுபற்றி விசாரித்துள்ளனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.