
சென்னை: சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஏடிஜிபி ஜெயராம், நாளை (ஜூலை 24) விசாரணைக்கு ஆஜராக சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காதல் திருமண விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தேனி மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபரான வனராஜா, முன்னாள் எஸ்ஐ மகேஸ்வரி, மணிகண்டன், கணேசன், வழக்கறிஞர் சரத்குமார் ஆகிய 5 பேரை திருவாலங்காடு போலீஸார் கடந்த ஜூன் 13-ம் தேதி கைது செய்தனர்.