
புதுடெல்லி: பாஜகவின் கொள்கைகளை எதிர்க்கும் சமாஜ்வாதி கட்சி இந்துத்துவாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் வரும் 2027 உ.பி. தேர்தலை முன்னிட்டு அக்கட்சியின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. உ.பி.யில் தற்போதைய ஷ்ராவண மாதத்தில் சமாஜ்வாதி சார்பில் காவடி யாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு முன்பாக கேதார்நாத்தில் இருப்பது போன்ற ஒரு சிவன் கோயிலை விரைந்து கட்டி முடிப்பதில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் இறங்கி உள்ளார். இந்த கோயில், அகிலேஷின் சொந்த ஊரான எட்டாவாவின் சபாரி பூங்கா அருகே 2021 முதல்கட்டப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடவடிக்கை மூலமாக சமாஜ்வாதி இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை எடுக்க முயல்வதாக கருதப்படுகிறது.