• July 23, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.32.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், நகை திருட்டு வழக்கில் போலீஸார் விசாரித்தபோது உயிரிழந்தார். இது தொடர்பான மனுக்கள் நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், ஏ.டி. மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் தரப்பில், “அஜித்குமார் குடும்பத்துக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை. காவல் மரண வழக்கில் பாதிக்கப்பட்டவர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, அஜித்குமார் குடும்பத்துக்கும், போலீஸாரால் தாக்கப்பட்ட நவீன், அருண், பிரவீன் ஆகியோருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *