• July 23, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின் மொடக்குறிச்சி தொகுதியில் 2021-ல் தாமரையை மலரவைத்து தனது செல்வாக்கைக் காட்டியது பாஜக. அப்போது இந்தத் தொகுதியில் போட்டியிட்ட திமுக துணைப் பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை பாஜக புதுமுகமான டாக்டர் சரஸ்வதி தோற்கடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்போது பாஜக-விடம் இருந்து இந்தத் தொகுதியைக் கைப்பற்ற காங்கிரஸ் ஆளுக்கு முந்தி களமிறங்கி இருக்கிறது.

ஈவி​கேஎஸ் இளங்​கோவன் மறை​வைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத் தேர்​தலில் தானே நேரடி​யாக போட்​டி​யிட்டு அந்​தத் தொகு​தியை காங்​கிரஸிடம் இருந்து கைப்​பற்​றியது திமுக. இனி ஈரோடு கிழக்கு தங்​களுக்கு ஒதுக்​கப்பட வாய்ப்​பில்லை என்​ப​தால், ஏற்​கெனவே தாங்​கள் வென்ற மொடக்​குறிச்சி தொகு​திக்​காக இப்போது ‘உரிமைக்​குரல்’ எழுப்​பத் தொடங்கி விட்​டது காங்​கிரஸ்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *