
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்.) பயண அட்டையிலிருந்து சிங்கார சென்னை அட்டைக்கு ஆக. 1-ம் தேதிமுதல் முழுமையாக மாற திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிக்க வசதியாக, சி.எம்.ஆர்.எல். பயண அட்டையுடன் கூடுதலாக தேசிய பொது போக்குவரத்து அட்டை (சிங்கார சென்னை அட்டை) கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அட்டை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. மேலும் இந்த அட்டையை மாநகரப் பேருந்துகளிலும் பயன்படுத்தும் திட்டம் ஜன.6-ம் தேதி தொடங்கப்பட்டது. இதன்பிறகு, சிங்கார சென்னை அட்டை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது.