
சென்னை: சென்னையில் ஆக.12-ம் தேதி நடக்கவுள்ள கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் மறைந்த பிடல் காஸ்ட்ரோவின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று அழைப்பு விடுத்தார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கியூபா மீது நடத்தி வரும் தாக்குதல், பொருளாதார தடை ஆகியவற்றை கண்டித்தும், கியூபாவுக்கு ஆதரவு தெரிவித்தும் கியூபா ஆதரவு ஒருமைப்பாட்டுக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.