
சென்னை: இந்து மதத்தின் மீது தீரா வெறுப்பு கொண்டவர் முதல்வர் ஸ்டாலின் என பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக தான் அவருக்கு அரசியலில் அடையாளம் தந்தது. சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்று எத்தனை உயர் பதவிகளை ஒரு கட்சி தந்தாலும், எல்லாவற்றையும் விட, தமிழ் மக்களின் நலனை விட தன் மதமே முக்கியம் என்பதை, திமுகவில் இணைந்ததன் மூலம் அன்வர் ராஜா உறுதிப்படுத்தி இருக்கிறார்.