• July 22, 2025
  • NewsEditor
  • 0

பாபநாசம்: “எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு. அதிமுக எப்போதும் கொள்கைகளை விட்டுக் கொடுக்காது” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பொதுமக்கள் மத்தியில் பேசியது: “இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான கே.என்.நேரு, ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்துக்கு என்னை வந்து பாருங்கள் என்று அண்மையில் பேசியிருந்தார். அவர் சொன்ன அனைத்து இடங்களுக்கும் நான் செல்லும் போது மக்கள் எழுச்சியுடன் வரவேற்கின்றனர். வரும் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *