
சென்னை: இணையதளங்களில் பகிரப்படும் பெண்களின் அந்தரங்க ஆபாச வீடியோக்களை உடனடியாக அகற்ற ஏதுவாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்லூரி பருவக் காதல் காரணமாக இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள தனது அந்தரங்க ஆபாச வீடியோக்களை அகற்றக் கோரி பெண் வழக்கறிஞர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.