• July 22, 2025
  • NewsEditor
  • 0

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில் தவறு நடந்தது தெரிந்தவுடன் 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்களின் பதவிகளை முதல்வர் பறித்து நடவடிக்கை எடுத்தார். மேலும் மாநகராட்சி அலுவலர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், அதிமுக, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி நிர்வாகத்தையும், தமிழக அரசையும் நேரடியாக குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில் இதற்கு பதிலடியோ, விளக்கமோ அமைச்சர்கள், திமுக மாநகர் மாவட்டச் செயலாளர் தரப்பில் அளிக்கப்படாதது திமுகவினரி டையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு விவகாரத்தில், வரியைக் குறைத்து நிர்ணயம் செய்த கட்டிடங்கள் கண்டறியப்பட்டு, அதன் சொத்து வரி மறு சீரமைக்கப்பட்டு வருகிறது. தற்போது கூட வீடுகளுக்கான வரியை செலுத்தி வந்த 200 திருமண மண்டபங்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கு முறையாக வரி விதிக்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *