
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் இழப்பீடு மற்றும் முக்கிய சாட்சிகள் 4 பேருக்கு பாதுகாப்பும் வழங்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாரின் சட்டவிரோத காவல் மரணம் தொடர்பாக வழக்கறிஞர் மாரீஸ் குமார், கார்த்திக் ராஜா, மகாராஜன் உள்பட பலர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.