• July 22, 2025
  • NewsEditor
  • 0

வேலூர்: காவிரி – கோதாவரி நதிநீர் இணைப்பு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு சுத்தமாக எதுவும் தெரியாது. எதுவும் தெரியாமலேயே ஊர், ஊராக சென்று பேசி வருகிறார் என நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 1,336 பயனாளிகளுக்கு அரசு துறைகள் சார்பில் வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்ட உதவிகள், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி உள்பட மொத்தம் ரூ.22 கோடியே 44 லட்சத்து 87 ஆயிரத்து 859 மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா காந்திநகரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் வி.ஆர். சுப்பு லட்சுமி தலைமை தாங்கினார். இதில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 1,336 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *