
மதுரை: மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் 2-வது நாளாக சாட்சிகளிடம் அதிகாரிகள் விசாரித்தனர். காலை முதல் மாலை வரையிலும் இந்த விசாரணை நீடித்தது.
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் காவலாளி அஜித்குமாரை ஜூன் 27-ம் தேதி திருப்புவனம் காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். 28-ம் தேதி காவல் நிலையத்தில் இருந்து தனிப்படையினர் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்தனர்.