
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜெகதீப் தன்கர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பிய அவர், அதன் நகலை குடியரசு துணைத் தலைவருக்கான எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இதையடுத்து, இன்று அவர் மாநிலங்களவைக்கு வருகை தரவில்லை. அவருக்குப் பதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் அவையை நடத்தினார்.