
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் பதவியை ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, மாநிலங்களவையை நடத்தும் பொறுப்பை அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் ஏற்றுள்ளார்.
குடியரசு துணைத் தலைவராக இருப்பவரே மாநிலங்களவையின் தலைவராக (சேர்மன்) இருந்து அவையை நடத்துவது மரபு. அவர் அவையில் இல்லாத தருணங்களில் அவையை துணைத் தலைவர் நடத்துவார். தற்போது மாநிலங்களவையின் துணைத் தலைவராக ஹரிவன்ஷ் உள்ளார். பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஹரிவன்ஷ், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து அக்கட்சியின் மூலம் 2014ம் ஆண்டு முதன்முறையாக பிஹாரில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வானார்.