
புதுடெல்லி: மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் பிரதமரின் ஜன் ஆரோக்யா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி, குறைவான வருமானம் உள்ளவர்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ஆயுஷ்மான் வயா வந்தனா திட்டத்தின்படி, 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (வருமானத்தை கணக்கில் கொள்ளாமல்) ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இலவசமாக வழங்கப்படுகிறது.