
திருவனந்தபுரம்: ஜூன் 14 முதல் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் பழுதாகி நின்ற பிரிட்டிஷ் விமானப்படையின் எப்-35 ரக போர் விமானம், பழுது நீக்கப்பட்டு இன்று (ஜூலை 22) அங்கிருந்து புறப்பட்டது.
பிரிட்டிஷ் விமானப்படைக்கு சொந்தமான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தயாரித்த 5ஆம் தலைமுறை ஸ்டெல்த் விமானமான எப்- 35 ரக போர் விமானம், ஜூன் 14 ஆம் தேதி அன்று திருவனந்தபுரம் விமான நிலையத்தில் எரிபொருள் குறைவாக இருந்ததால் அவசரமாக தரையிறங்கியது. அதன்பின்னர் இந்த விமானத்தில் பழுது ஏற்பட்டதால், அதனை பழுது நீக்கும் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியடைந்தன. இந்த விமானத்தின் இறக்கைகளை பிரித்து ஜம்போ விமானத்தில் ஏற்றிச் செல்வதிலும் சிரமங்கள் இருந்தன.