
ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணிகள் தொடங்கியது.
நீலகிரி மாவட்டத்துக்கு நாள்தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இதுவே முதல் சீசனாக அனுசரிக்கப்படுகிறது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளி மாநிலங்களில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனால், இவ்விரண்டு மாதங்கள் இரண்டாம் சீசனாக அனுசரிக்கப்படுகிறது.