
புதுடெல்லி: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் அடுத்த குடியரசு துணைத் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாகவும் அதன் காரணமாகவே ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் உடல்நிலையை காரணம் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வாழ்த்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.