
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் மரபை உறுதி செய்யும் வகையில், தலைமை நீதிபதியாக அல்லாமல், பணிவான சேவகனாக பணியாற்றி நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்பதாக, புதிய தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா உறுதி அளித்தார்.
புதிய தலைமை நீதிபதி எம் எம் ஶ்ரீவஸ்தவா- வுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. புதிய தலைமை நீதிபதியை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், தமிழகத்தின் பெருமைகளையும் சென்னையின் வளமையையும் 163 ஆண்டு பழமையான உயர் நீதிமன்றத்தின் தொன்மையையும், தமிழின் பெருமையையும் விளக்கி, நீதி பரிபாலனத்துக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதி அளித்தார்.