
புதுடெல்லி: 2020 முதல் 2024-ம் ஆண்டு வரையிலான கடந்த 5 ஆண்டுகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 நாடுகளிலிருந்து மொத்தம் 610 தொல்பொருட்கள் மீட்கப்பட்டதாக மத்திய அரசு நேற்று (ஜூலை 21) மக்களவையில் தெரிவித்தது.
இந்தியாவிலிருந்து திருடப்பட்ட பழங்கால கலைப்பொருட்கள் மற்றும் தொல்பொருட்கள் தொடர்பாக மத்திய அரசு ஏதேனும் கணக்கெடுப்பு மற்றும் ஆய்வை மேற்கொண்டதா என்றும், கடந்த 5 ஆண்டுகளில் தொல்பொருட்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, மக்களவையில் கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.