
மதுரை: திமுகவின் 'ஓரணியில் தமிழ்நாடு' முகாமில் ஓடிபி எண் பெற தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவினர் நீதிமன்றத்தில் தவறான தகவல்களை தெரிவித்து தடையாணை பெற்றதாக நீதிபதிகளிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது. இதையடுத்து தடையை விலக்க கோரி இடையீட்டு மனு தாக்கல் செய்ய திமுகவுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
தமிழகம் முழுவதும் திமுகவினர் நடத்தி வரும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் பொது மக்களிடம் ஓடிபி எண் பெற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நேற்று தடை விதித்தது.