
கடலூர்: ரஷ்யாவில் கைதாகி சிறையில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் பகுதி மருத்துவ மாணவரை மீட்கக்கோரி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டையைச் சேர்ந்த சரவணன் என்பவர் தனது மனைவி மற்றும் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து, ரஷ்யாவில் மருத்துவம் படிக்கச் சென்று, அங்கு தவறான குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் தனது மகன் கிஷோரை விடுவித்து, இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.