
சென்னை: ஐந்து ஆண்டுகள் நன்றாக பணியாற்றிய கேட் கீப்பர்களை இன்டர்லாக் செய்யப்படாத கேட்களில் பணியமர்த்த தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட் பகுதியில் கடந்த 8-ம் தேதி பள்ளி வாகனம் மீது விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, லெவல் கிராசிங் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்களை மேம் படுத்துவது, இன்டர்லாக்கிங் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்படாத லெவல் கிராசிங் கேட்களை தினசரி ஆய்வு செய்வது உட்பட பல்வேறு உத்தரவு களை ரயில்வே துறை பிறப்பித்துள்ளது.