
அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கடந்தகால ஆட்சியின்போது ரூ.3,500 கோடி மதுபான ஊழல் நடந்ததாக சிறப்பு ஆய்வு குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெகன் கட்சியை சேர்ந்த ஒரு எம்பி உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்தார். அப்போது, தமிழகத்தை போன்று ஆந்திராவிலும் அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தியது. அப்போது புதுப்புது ‘பிராண்ட்’ கள் புழக்கத்துக்கு வந்தன.