
திருச்சி: தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது தவறோ, பாவமோ இல்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற கருத்து தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி கூட்டணி ஆட்சிதான். இதற்கு முன்பு வாஜ்பாய், நரசிம்மராவ் ஆகியோர் பிரதமர்களாக இருந்தபோதும் கூட்டணி ஆட்சி தான் நடந்தது. பல மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.