
புதுடெல்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் வெற்றியை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் இணைந்து கொண்டாட உள்ளனர். அதேபோல, சர்வதேச விண்வெளி நிலையத்தில் முதல்முறையாக இந்திய தேசிய கொடியை ஷூபான்ஷு ஏற்றிய சாதனையும் கொண்டாடப்பட உள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி கூறியதாவது: