
சென்னை: “தமிழக மக்களின் நலனை விட, வகுப்புவாத, பிரிவினைவாத ஆதரவும், சுயநல மதவாத அரசியலுமே முக்கியம் என வெளிப்படையாக அறிவித்த அன்வர் ராஜாவுக்கு நன்றி” என தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார் என்ற செய்தி, இன்பத் தேன் வந்து பாய்வது போல இருந்தது. அதிமுக தான் அவருக்கு அரசியலில் அடையாளம் தந்தது.