
சென்னை: கடந்த 4 ஆண்டுகளில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடனுதவி வழங்கி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் பொருளாதார தேவையை கருத்தில் கொண்டு, அவற்றின் செயல்பாடுகளுக்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.